Friday, August 19, 2005

கதை - 7



ரவிக்கு எதிர்சமூக மனநோயோ (Antisocial personality disorder APD) எதையும் அனுசரித்துப் போகாததால் (Adjustment disorder) அவனுக்குள் எழுந்த உள்மனப் போராட்டமோ சமுதாயத்துக்கு எதிரியாக சித்தரிக்க ஆரம்பித்தது.

இதை மனதில் கொண்டுதான் ரவி கதையை ஆரம்பித்தான். தனது கதையை விட சிறந்த தொலைக்காட்சித் தொடரை இனி செய்ய முடியாது என்று உறுதியாக நம்பினான். கூடிப் பழகும் இயல்புமில்லாமல் குமுகாயத்தின் மேல் கொண்ட மனக்கிலேசங்கள்தான் எழுதியதை நடத்திக் காட்ட உறுதுணையாக இருந்தது. கனவு போல எழுதிய கதையை செயல்படுத்தும் வாய்ப்பு அவனுக்கே கொடுக்கப்பட்டது.

நாயகனாக உருவகித்த நாடகத்தை நிஜமாக்கும் வாய்ப்பு அவனுக்குத் தரப்பட்டது. எல்லாம் தூங்கியெழுவதற்குள் நடந்து விடுகிறது. தூங்கும் எட்டு மணி நேரங்களும் பொன்னான மணித் துளிகள். விரயமாகக் கூடாத தருணங்கள் நிறைந்தவை. சண்டை நிகழாத, மௌனமான அமைதிப் பள்ளத்தாக்கில், தான் சொல்வதெல்லாம் நடக்கும் அற்புதங்கள் கொண்டவை. அந்த எட்டு மணி நேரத்தில்தான் அவனுடைய நிஜ நாடகம் பிபிசியில் ஒளிபரப்பானது.

No comments: