Tuesday, August 16, 2005

கதை - 3




ஆகஸ்ட் 15
என்னுடைய கனவுகள் இந்தியாவுக்கு செல்பவை. தூக்கத்தில் வரும் கனவுகளை சொல்கிறேன். நிஜத்தில் லண்டனே பிடித்திருக்கிறது.

இன்று சுதந்திர தின விடுமுறை.

குடும்பத்துடன் ஸ்பென்ஸர் ப்ளாசாவுக்கு சென்றிருப்பேன். பஃப் சாப்பிடுவேன். அங்கிருந்து தேவி காம்ப்ளெக்ஸில் 'பூம்' அல்லது '2 Fast 2 Furious' பார்ப்பேன். இரவு பிட்ஸா ஹட்டில் தந்தூரி சிக்கன் பிட்ஸா. மின்மினிகளும் மெர்க்குரி விளக்குகளுக்கும் கீழே காமராஜர் சாலையில் மாருதியோடு திருவான்மியூருக்குத் திரும்புவேன். கொஞ்ச நேரம் ரிமோட் விளையாடி சேனல்களோடு மேலிருந்து கீழிறங்கிவிட்டு, மொட்டை மாடியில் தூங்குவேன்.

ட்ரெயினுக்கு லேட்டாச்சு. அலாரம் கேட்டு தூக்கம் கலைந்தேன். எழுந்து கொண்டு எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

No comments: